மூலம் - http://www.kaniyam.com/software-paid-public-money-open-source-groups-say/
மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும் என்று ஐரோப்பிய குழுக்கள் சொல்கின்றன.
141 அமைப்புகளும் 17005 நபர்களும் இந்த வெளிப்படைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். https://publiccode.eu/openletter/ மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வழி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. ஐரோப்பிய எண்ணிம உரிமை முன்னெடுப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கோர பல நியாயமான காரணங்கள் இருப்பினும் அரசியல்வாதிகளுக்கு இது இன்னும் புரிய ஆரம்பிக்கவில்லை. திறந்த மூல மென்பொருளை யாவரும் படிக்கலாம், பயன்படுத்தலாம், பகிரலாம் மற்றும் மேம்படுத்தலாம். அரசாங்கமும் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களும் மக்களின் வரிப் பணத்தில் நடைபெறுகின்றன. மக்களின் வரிப் பணத்தில் எழுதப்படும் நிரல்கள் மக்கள் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தக் காரணத்தால்தான் கீழே கையெத்திட்டுள்ள நாங்கள் எங்கள் பிரதிநிதிகளை இவ்வாறு கேட்டுக்கொள்கிறோம்:
“மக்களின் வரிப் பணத்தில் எழுதப்படும் நிரல்களைக் கட்டற்ற திறந்த மூல உரிமத்தில் தான் வெளியிட வேண்டும் என்று சட்டம் இயற்றுங்கள்.”
*இரா. அசோகன் http://www.kaniyam.com/?author=45*
மூலக்கட்டுரை இங்கே https://www.ip-watch.org/2017/09/13/software-paid-public-money-open-source-groups-say/