நவீனத் தமிழுக்கான நாற்று - கணியம் அறக்கட்டளை

மிழ், இணையத்துக்கு ஏற்றமொழியல்ல என்ற மூடநம்பிக்கையை உடைத்து, தூய தமிழில் தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் இளைஞர்கள் குழு.நிரலாக்கத்தைத் தமிழ்மயப்படுத்துவது, அதற்கான இ-புத்தகங்களை உருவாக்குவது, உரை ஒலி மாற்றி, எழுத்துணரி உருவாக்குவது எனக் கணினியியலில் எல்லோருக்கும் பயன்படும் அழகுதமிழ் சாத்தியங்களை அகலப்படுத்தும் இந்த இளைஞர்கள், FreeTamilEbooks.com மூலமாக ‘கிரியேட்டிவ் காமன்ஸ்’ உரிமத்தின் கீழ் பதிப்புரிமை விதிகளுக்கு உட்பட்டு 650-க்கும் மேற்பட்ட மின்புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவை 80 லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டியிருக்கிறது என்பது பெருமிதமான செய்தி. இவர்களின் ‘ஒலிபீடியா’ மற்றுமொரு டிஜிட்டல் புதுமை. இந்தத் திட்டத்தின் மூலம் வெளியிடப்படும் ஒலிநூல்களை உலகத் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். சங்க இலக்கியம் தொடங்கி Machine Learning வரை அனைத்தையும் உள்வாங்கித் தொழில்நுட்பத் தமிழை வளப்படுத்தும் இந்த அறக்கட்டளை நாயகர்கள் சீனிவாசன், நித்யா, அன்வர், கலீல், கார்க்கி, லெனின், அருணாசலம் ஆகியோருக்கு மனமுவந்த தமிழ் வணக்கம்!

விகடன் குழுமத்தின் டாப் 10 விருது பெறும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

முனைவர். இரா. அகிலன்